இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 246 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி, 123 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 86 ரன்களை விளாசினார். இதன் மூலம் சாதனை ஒன்றை படைத்து உள்ளார். அதாவது இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். எதிர்வரும் போட்டிகளிலும் இதை பார்மை தொடர்வார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
குடியரசு தினம் எதிரொலி: ஜியோ சிம் பயனாளர்களுக்கு தள்ளுபடி சலுகை., வெளியான மாஸ் அறிவிப்பு!!!