பெங்களுருவில் தனது உடற் தகுதியை நிருபித்து கடந்த 16ம் தேதி ஆஸ்திரேலிய சென்ற இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் தனிமை படுத்துதல் காலம் நாளை முடிவடைகிறது. மேலும் நாளை இந்தியா அணியுடன் மெல்போர்னில் இணைய உள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிட்மேன்
காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயண அணியில் இடம் பிடிக்காத ரோஹித் சர்மா தனது உடற்தகுதியை நிருபித்தால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். அதற்காக ரோஹித் சர்மா கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு தனது உடல் எடையும் சிறிது குறைத்துள்ளார். அதன் பின் பெங்களுருவில் நடந்த உடற்பயிற்சி தேர்வில் ரோஹித் சர்மா தனது பிட்னெஸை நிருபித்து அசத்தியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியா அணியுடன் இணையும் ரோஹித்
இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் கடந்த 16ம் தேதி ஆஸ்திரேலிய சென்ற ரோஹித் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டார். எனவே அவரால் முதல் 2 போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. மேலும் இவரது தனிமைப்படுத்துதலின் காலம் நாளை முடிவடைகிறது.
எனவே இவர் மெல்போர்னில் இருக்கும் இந்தியா அணியுடன் நாளை இணையப்போகிறார். மேலும் சிட்னியில் கொரோனா பரவல் உள்ளதால் 3 வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய இந்தியா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில் ‘ரோஹித் ஷர்மாவின் வருகையை குறித்து ஆர்வமாக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.