டி20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்காக, பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா:
இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில், வெற்றி பெறும் அணி, உலக கோப்பையை வெல்ல கூடிய இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், இந்திய கேப்டனான ரோஹித் சர்மா நடப்பு உலக கோப்பையில், நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே அரைசதத்தை (53) கடந்திருந்தார். மற்ற போட்டிகளில் இவர், 4, 15, 2 மற்றும் 15 என இருபது ரன்களை கடப்பதற்கே தடுமாறி இருந்தார். இதனால், தனது பார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் இன்று வலை பயிற்சியை மேற்கொண்டார்.
இந்திய அணியில் இவரை வீழ்த்துவது சிரமம்.., பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஓபன் டாக்!!
இந்த பயிற்சியின் போது, இவரது கையை, ஷாட் பால் ஒன்று பதம் பார்த்தது. இதனால், இவருக்கு முதலுதவி கொடுக்கும் வகையில், ஐஸ்கட்டியை கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வில் இருந்தார். இதனை தொடர்ந்து, மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட இவர், தற்காத்துக் கொள்ளும் வகையிலேயே விளையாடினார். இதன் விளைவால், இந்திய மருத்துவ குழு இவரது காயத்தை பரிசோதித்த பிறகே, காயத்தின் தன்மையை அறிய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.