ரிஷப் பண்ட்-க்கு ஒப்பந்த தொகை முழுவதையும் பிசிசிஐ தர திட்டமா?? வெளியான தகவல்!!

0
ரிஷப் பண்ட்-க்கு ஒப்பந்த தொகை முழுவதையும் பிசிசிஐ தர திட்டமா?? வெளியான தகவல்!!
ரிஷப் பண்ட்-க்கு ஒப்பந்த தொகை முழுவதையும் பிசிசிஐ தர திட்டமா?? வெளியான தகவல்!!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், சமீபத்தில் பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளாகி இருந்தார். இந்த விபத்தினால், தலை, முதுகு, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதற்காக, தலையின் நெற்றி பகுதியில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள மருத்துவமனையில், இவருக்கு முழங்காலில் தசை நார் கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இவர் குறைந்த பட்சம் 6 மாதம் வரையிலும், கிரிக்கெட் விளையாடுவது சந்தேகம் தான். மேலும், இவர் ஐபிஎல் தொடரையும், 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் இழக்க நேரிடும். இவரது உடல்நிலை குறித்து, தொடர்ந்து கண்காணித்து வரும் பிசிசிஐயானது, வணிக ரீதியிலும் இவருக்கு உதவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பவர் பிளேயில் முன்னிலை பெற்ற இந்தியா…, நாளை போட்டியிலும் சாதனை தொடருமா??

அதாவது, பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் உள்ள ரிஷப் பண்ட் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வருவாயாக பெற்று வந்தார். இவர், தற்போது, சில காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க நேரிடும். ஆனாலும், பிசிசிஐ இவரது வருட ஒப்பந்தத்தை முழுவதுமாக (5 கோடி ரூபாய்) தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸுடன் உள்ள ஒப்பந்த தொகையையும் அணி நிர்வாகம் இவருக்கு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here