“சுத்தமான காற்றை உணர்கிறேன்”…, கார் விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு!!

0
"சுத்தமான காற்றை உணர்கிறேன்"..., கார் விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்துக்கு பிறகு, உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடருக்காக, பல முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பிய போதும், டெஸ்ட்டின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் இல்லாமல் இருப்பது ஏமாற்றமாகவே உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர், சமீபத்தில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கியதன் மூலம், சில அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். இதில் இருந்து இவர், மீண்டு பூரணமாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக தான், இவர் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் .,இந்த அப்டேட்டுக்காக இவ்ளோ நாளா தவம் கிடந்தோம்!!

இவர், விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்று பல தரப்பில் இருந்து விருப்பம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வெளியே அமர்ந்து சுத்தமான (புதிய) காற்றை சுவாசிப்பதால், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் மூலம், இவர் உடல் மற்றும் மனம் சார்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here