பொதுவாக பலர் தங்களை வீட்டில் செல்லப் பிராணியாக நாய் குட்டிகளை வளர்த்து வருவது வழக்கம். அப்படி வளர்க்கப்படும் அமெரிக்க எக்ஸ். எல் புல்லி வாகை நாய்களால் மக்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. அதாவது சமீபமாக இங்கிலாந்தில் இந்த வகை நாய்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கி உள்ளனர். இதை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி கனக் ட்விட்டரில் இது குறித்து வீடியோ பகிர்ந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் அமெரிக்க எக்ஸ். எல் புல்லி நாய்கள் வளர்ப்பதற்கு தடை விதித்திருப்பதாக அறிவித்திருந்தார். அதாவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நாய் வகையில் இதை சேர்த்து, இந்த ஆண்டுக்குள் புதிய சட்டத்தை கொண்டு வர போவதாக கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலர் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
It’s clear the American XL Bully dog is a danger to our communities.
I’ve ordered urgent work to define and ban this breed so we can end these violent attacks and keep people safe. pic.twitter.com/Qlxwme2UPQ
— Rishi Sunak (@RishiSunak) September 15, 2023