T20 WC 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இந்த இரு அணிகள் தான்…, அடித்துச் சொன்ன ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!!

0
T20 WC 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இந்த இரு அணிகள் தான்..., அடித்துச் சொன்ன ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்த இரு அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்:

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் உள்ள அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்த போட்டிகளின் முடிவில், குரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போல, குரூப் 2 வில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. இதனை தொடர்ந்து, தலா 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன. இதனால், மீதமுள்ள ஒரு போட்டி முடிவடைந்த பிறகு தான், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெளிவாக தெரியும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என கணித்து உறுதியாக கூறியுள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய அணியானது, ஆப்கானிஸ்தானை மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்துடன் வீழ்த்தினால் மட்டும் முதலில் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here