தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமாக பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இது போக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த புயல் காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, தஞ்சை மாவட்ட பள்ளிகள், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகள், காஞ்சிபுரம் குன்றத்தூர் தாலுகா பள்ளி, கல்லூரி பகுதிகள் ஆகிய குறிப்பிட்ட பகுதி கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here