நாடு முழுவதும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவுப் பொருளாக கருதப்படுவது அரிசி தான். இந்த அரிசி தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளான ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அரிசி உற்பத்தி பற்றாகுறையால் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற பொருட்களின் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் நீர் பற்றாக்குறையால் 2 லட்சம் வரை சாகுபடி செய்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் இது 12 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது.எனவே அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.