சின்ன சேலம் அருகே உள்ள பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்க கூடாது என்று அறிவித்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தற்போது வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நாளை பள்ளி இயங்கும்:
கள்ளக்குறிச்சியில் உள்ள சின்ன சேலத்திற்கு அருகாமையில் இருக்கும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பள்ளியை தாக்கியும் வன்முறையிலும் இறங்கினர். மேலும் பள்ளியின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதே போல் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மூடப்படும் மற்றும் ஆசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க போவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாகவும் மற்றும் நாளை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்