மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி – பீதியில் மக்கள்!!

0

கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பரவி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் குரங்கு அம்மை:

உலகமே கொரோனாவின் தாக்கத்தால் கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ள நிலையில் தற்போது மிக தீவிரமாக குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வருகிறது. இந்த நோய் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. மேலும் உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்கு குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு திரும்பிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here