ஆஸ்கார் விருது வழங்கும் விழாவிற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமல்ல என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மூன்று தொகுப்பாளினிகள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவுப்பு வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக உருவாகும் காதல் ஜோடி – இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
ஆஸ்கார் 2022:
திரைப்பட விருதுகளிலேயே மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது தான் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க மாகாணத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 27 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த விருதுக்கான இறுதி பட்டியலுக்கு ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகும் என எதிர்பார்த்த சமயத்தில் அது நடக்கவில்லை. ஆனால் இந்திய திரைப்படமான ரைட்டிங் வித் ஃபயர் என்னும் திரைப்படம் இறுதி பட்டியலுக்கு தேர்வானது.
ஏற்கனவே இந்த வழங்கும் விழாவிற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமல்ல என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகவே ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொகுப்பாளர் இல்லாமலே நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் என 3 முக்கிய பெண்கள் தொகுப்பாளராக கலந்துகொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா களைகட்ட போவதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்