சின்னசேலம் போராட்டம் எதிரொலி – இன்று மாணவி ஸ்ரீமதி உடல் மறுபிரேத பரிசோதனை!

0
சின்னசேலம் போராட்டம் எதிரொலி - இன்று மாணவி ஸ்ரீமதி உடல் மறுபிரேத பரிசோதனை!

சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுபிரேத பரிசோதனை இன்று நடைபெறும் நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபிரேத பரிசோதனை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அருகே உள்ள சக்தி தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி விடுதியில் 3வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் தெரிவித்தது. அதை ஏற்க முடியாமல் மாணவி மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்தும், இந்நிகழ்வு வருத்தமளிக்கிறது என்றும், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மூன்று குழு அமைத்து அதை வீடியோ எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யப்படுவதால் வேறு எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக பிணவறை முன் ஏராளமான போலீஸ்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here