தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி, கெத்து, மனிதன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். தற்போது அவர் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று கூறினார். அதற்கு காரணம் சமீபத்தில் இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு எடுத்த நிலையில், தொடர்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதனால் இவர் நடத்தி வந்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார். இந்த நிறுவனம் கடைசியாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டது. அந்த வகையில் அதிக தியேட்டரில் துணிவு திரைப்படமும், குறைந்த தியேட்டர்களில் வாரிசு திரையிடப்பட்டது. இதனால் தில் ராஜு பேச்சு வார்த்தை நடத்தி பெரும் சர்ச்சையை கிளப்பினார். மேலும் வசூல் ரீதியாக வாரிசு படத்தை வீழ்த்த உதயநிதி சைடு இருந்தவர்கள் சிலர் சதி வேளைகளில் ஈடுபட்டதாக பிரபல சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
அட்ரா சக்க…, பிளாக் பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்..,AK 62 படத்தின் மாஸ் அப்டேட்!!
அதுமட்டுமின்றி அமைச்சராக இருந்து சினிமாவை ஆட்டி படைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். தற்போது அவரது குற்றச்சாட்டு மனு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொண்டு சென்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை மையமாக வைத்து ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் வாய்க்கால் தகராறு இருந்து வரும் நிலையில், உதய நிதியை வைத்து ஆட்சியை கவுக்க பிளான் செய்கிறார்கள் என்று தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸிலிருந்து விலகிய உதயநிதி, அந்த நிறுவனத்தை காப்பாற்றுவாரா? என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.