ஆபாசப் படம் தயாரித்த நடிகை கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!!

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் பல்வேறு மாற்று பணிகளுக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் மும்பையில் நடிகை ஒருவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நடிகையையும் அவரோடு இணைந்து வீடியோ தயாரித்த மேலும் இருவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாசப் படம்:

மும்பையில் வசித்து வரும் மாடல் அழகியான கெஹானா வசிஸ்த் என்பவர் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 87 ஆபாச திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டதாக தற்போது மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுளார். இவர் குறும்படங்கள் எடுப்பதாக கூறி மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் துணை நடிகைகளை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்துள்ளார். கொரோனா கால வேலையிழப்பை பயன்படுத்தி அவர் துணை நடிகைகளுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் கொடுத்து இந்த விடீயோக்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.

ட்விட்டருக்கு சமமாக வளர்ந்து வரும் ‘கூ’ வலைத்தளம் – இணைந்த பிரபலங்கள்!!

மேலும் சந்தா செலுத்தப்பட்டு பார்க்கப்படும் OTT தளங்களில் அந்த விடீயோக்களை பதிவேற்றி, அவற்றை பார்ப்பதற்கு ரூ.2000 கட்டணம் வசூலித்துளார். அதன் மூலம் மட்டுமே சுமார் 36 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துளார். இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள 3 வங்கி கணக்குகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அவருடன் சேர்த்து உமேஷ் காமத் என்பவரும், ஷா தானாஜி என்ற புகைப்படக்கலைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கெஹானா வசிஷ்த்தின் உண்மையான பெயர் வந்தனா திவாரியாகும். இவர் கடந்த 2012ல் மிஸ் ஆசியா பிகினி பட்டத்தை வென்றுள்ளார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சுமார் 80க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்துள்ள இவர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here