நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் இலவசமாக ரேஷன் பொருட்களில் ஒன்றான அரிசியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த சலுகை ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி இதன் மூலம் கிட்டத்தட்ட 67,92,153 குடும்பங்கள் பயன் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சலுகை 2024 முதல் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களே…, அரசின் அனைத்து சலுகைகளையும் பெற இதுக்கு APPLY பண்ணுங்க…, முழு விவரம் உள்ளே!!