ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் படைத்த தமிழ் நாட்டு வீரர்…, சதங்களை அள்ளி குவித்து அசத்தல்!!

0
ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் படைத்த தமிழ் நாட்டு வீரர்..., சதங்களை அள்ளி குவித்து அசத்தல்!!
ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் படைத்த தமிழ் நாட்டு வீரர்..., சதங்களை அள்ளி குவித்து அசத்தல்!!

ரஞ்சி டிராபியில், தமிழ் நாட்டு அணியின் விஜய் சங்கர் 6 வது இடத்தில் களமிறங்கி ஹாட்ரிக் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ரஞ்சி டிராபி:

ரஞ்சி டிராபி தொடரானது இந்தியாவில், தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட அணிகளை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிராபியில், தமிழ் நாடு அணியானது கடந்த 17ம் தேதி முதல் அசாம் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் போட்டியிட்டு வருகிறது. இதில், டாஸ் வென்ற தமிழ் நாட்டு அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து களமிறங்கிய, தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 540 ரன்களை குவித்திருந்தது. இதில், நாராயண் ஜெகதீசன் (125), பிரதோஷ் ரஞ்சன் பால் (153), விஜய் சங்கர் (112) என ஒரே இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்தி இருந்தனர். இவர்களில், விஜய் சங்கர் இதற்கு முன் நடந்த 2 இன்னிங்ஸிலும் (107, 103) என சதங்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இவங்க 2 பேரையும் வாழ்க்கையில் இழந்துட்டேன்., பழசை நினைத்து புலம்பும் வனிதா விஜயகுமார்!!

இதுபோல், தொடர்ந்து 3 சதங்களை அடிப்பது என்பது தொடக்க வீரர்களுக்கு புதிது அல்ல. ஆனால், விஜய் சங்கர் 6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்த ஹாட்ரிக் சாதனையை படைத்திருப்பது பாராட்ட கூடிய ஒன்றாகும். இவரை, பிசிசிஐயானது 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here