கொரோனா பொது முடக்கத்தால் பலர் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் திரைத்துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். சிலர் திருமண பந்தத்தில் இணைத்து உள்ளனர். அந்த வகையில் “பாகுபலி” புகழ் ராணாவின் திருமணம் நிச்சயிக்க பட்டு உள்ளது.
“பாகுபலி” புகழ் ராணா டகுபதி:
இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேசின் அண்ணன் (சுரேஷ் பாபு) மகன் ஆவார். பழம்பெரும் தயாரிப்பாளர் டகுபதி ராமாநாயுடு இவரின் தாத்தா ஆவார்.
கொலையா? தற்கொலையா? நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வாழ்க்கை திரைப்படமாகிறது..!
திருமணம்:
பொது முடக்கத்தால் படப்பிடிப்பு நடக்காத நிலையில் திரை பிரபலங்கள் தங்கள் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பதை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில் ராணாவும் தன் திருமண வாழ்க்கையை நோக்கி செல்ல உள்ளார். அண்மையில், தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது இவரது திருமணம் எளிமையாக வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடக்க உள்ளது. பேஷன் கலைஞர் ஆன மிஹீகா தான் ராணாவின் வருங்கால மனைவி ஆக போகிறவர். கொரோனா பொது முடக்கத்தால் அவரது திருமணம் எளிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.