பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் நடிகை ரம்யா பாண்டியனுக்கு பிரபல பிக்பாஸ் போட்டியாளாருடன் திருமணமா என்கிற கேள்விக்கு ரம்யா பாண்டியனின் தம்பி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகைக்கு திருமணமா?
தமிழ்படமான ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரகனியுடன் ‘ஆண் தேவதை’ படத்திலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் சென்ற ஆண்டு அறிமுகமான பிரபல ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ஷோவில் அவரது அழகான பேச்சாலும், அவரது குணத்தாலும் அநேக ரசிகர்களை சம்பாதித்தார்.
டிராக்டரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி – இன்று காலை துவங்கியது!!
தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார். அந்த போட்டியில் இறுதிவரை போட்டியிட்டு நான்காவது இடத்தை பெற்றார். மேலும் பிக்பாஸில் கலந்து கொண்ட சகபோட்டியாளர் சோம் சேகருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் காதல் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரம்யாவின் தம்பி பரசு பாண்டியன் சமூகவலைதளத்தில் சோம் பற்றி ஒரு கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் செலவழித்த ஒரு மணி நேரத்தில் சோம் ஒரு நல்ல மனிதர் என்றும் இனிமையனாவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ரசிகர் ஒருவர் ரம்யா மற்றும் சோம் இருவரும் ஒன்றாக இணைவார்களா என்று கேள்வி கேட்ட போது அதைப்பற்றி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.