நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தற்போது இதனை முன்னிட்டு நாட்டின் குடியரசு தலைவர் ஆன ராம்நாத் கோவிந்த் இன்று மாலை நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தின விழா:
நாளை நம் நாட்டின் 72வது சுகந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அனைத்து இடங்களிலும் கொடி ஏத்துவதற்கான வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், மக்கள் என அனைவரும் கலந்துகொள்ள தடைவிதித்துள்ளது. மெரினா கடற்கரையில் ஆளுநர் தலைமையில் கோடி ஏற்றும் விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது .
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிரடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஆர்வம்!!
தற்போது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேலும் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நம் நாட்டின் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் இன்று மாலை நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். இன்று மாலை 7 மணிக்கு அவரது உரை அகில இந்தியா வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்ப பட உள்ளது. மேலும் அனைத்து தூர்தர்சன் சேனல்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் ஒளிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஸன் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.