ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.., சந்தேகத்திற்குரிய நபர் கைது.., தீவிர விசாரணையில் போலீசார்!!!

0
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.., சந்தேகத்திற்குரிய நபர் கைது.., தீவிர விசாரணையில் போலீசார்!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்பு திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இது முதலில் விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதியை நிலையில் அங்கு பதிவாகிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இது ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் 10 பேருக்கு மேல் காயம் அடைந்ததால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இவர்கள் நடத்திய விசாரணையில் ஒரு மர்ம நபர் வெறும் 9 நிமிடத்தில் குண்டு வைத்துவிட்டு கிளம்பியது தெரியவந்தது. இந்நிலையில் அவரை சந்தேகத்திற்குரிய நபராக தேடப்பட்டு வந்த நிலையில் தேசிய முகமைக்கு இப்போது அவரை பெல்லாரியில் வைத்து கைது கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிவில் குண்டு வெடிப்புக்கு காரணமான பல விஷயங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here