நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு!!

0

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். இவரை கடந்த 2016 ம் ஆண்டு மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தனது மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது குறித்து வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியாக இருப்பதால், அதை முறையாக பரிசோதனை செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.., சந்தேகத்திற்குரிய நபர் கைது.., தீவிர விசாரணையில் போலீசார்!!!

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மதுரை கிளையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி என நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here