ராஜ்யசபா தேர்தல் 2020 தேதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0

கொரோனா பரவல் காரணமாக  மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூரில், மேகாலயா, ராஜஸ்தான் உள்ளிட்ட 18 இடங்களுக்கு மீண்டும் தேர்தலை  ஜூன் 19 ஆம் தேதிநடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 19ஆம் தேதி தேர்தல்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 19 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1,  ராஜஸ்தான் 3 ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடந்த நாள் அன்றே மாலை 5 மணிக்கு தேர்தலின் முடிவும் வெளியிடப்படும் என இந்தியா தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்  கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

யாரும் இன்னும் பதவியேற்கவில்லை

இதற்கு முன் நடந்த  மாநிலங்களவை  தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடந்தது அதில் 17 மாநிலங்களில் இருந்து 55 எம்பிக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஆதில் தமிழகத்திலிருந்து அதிமுக, திமுக சார்பில் 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் யாரும் இன்னும் மாநிலங்களவையில் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here