தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் வரும் காலங்களில் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.
நகை விற்பனை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 2 மாதமாக (அட்சய திருதியை உட்பட) நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி ஏசி வசதியை பயன்படுத்தாமல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட அரசு அனுமதி அளித்தது. இதனால் கடைகளில் நகை வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 36,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,507க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ. 54.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 54,800 ஆக அதிகரித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |