தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,)குடியரசு தின விழா முகாமுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங்க் பின்வருமாறு தெரிவித்தார்.
நமது அண்டை நாடுகள் மதத்தின் அடிப்படையிலானது என கூறிக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் மதசார்புள்ள நாடு தான். இந்தியா மதங்களில் பாகுபாடு காட்ட மாட்டோம் என கூறியுள்ளது.
சீன ராணுவத்தினரால் இந்தியா சீனா எல்லையில் பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் அங்குள்ள மக்கள் கவலைப்பட வேண்டாம். நமது எல்லைகளை பொறுத்தவரை, நமது ராணுவ படைகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கவனித்து கொள்வார்கள். இந்தியாவை எதிர்க்க எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் நம்முடைய சாதுக்கள், துறவிகள் என அனைவரும், எல்லைக்குள் வாழும் மக்களை குடும்பத்தின் ஒரு பகுதியாக பார்க்காமல், உலகில் வாழும் அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுகின்றனர். எனவே தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. இந்தியாவில் எல்லா மதங்களும் சமம்; அனைத்து மதத்தினரும் இங்கு வாழலாம் என்றவாறும் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |