குஜராத் மாநிலம் அஹமதாபாத் – மும்பை இடையிலில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஐஆர்சிடிசி கடந்த ஜனவரி 19ம் தேதி அறிவித்திருந்தது. இந்த ரயில் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அஹமதாபாத்தில் நேற்று (ஜனவரி 22) காலை புறப்பட்ட ரயில், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்தது. இதனால் பயணியர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் ரயிலில் பயணித்த 630 பேருக்கும் தலா 100 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இழப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |