நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அது போக இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு போன வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 23 ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது கார் சாவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். இப்படி சூப்பர் ஸ்டார் வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் கிளம்புவதை பார்த்து ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். சவுந்தர்யா, ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.