பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி கிளாசுக்கு வராததால் அவருக்கு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்க, அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார். பின் பாக்கியா, அவரது தோழி இருவரும் பழனிச்சாமியின் அம்மாவை பார்க்க வீட்டுக்கு வருகின்றனர். பிறகு வீட்டிற்கு வந்த இருவரையும் பழனிச்சாமி வரவேற்று அம்மாவிடம் அழைத்துச் செல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது பழனிச்சாமிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று அவருடைய அம்மா பாக்கியாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பின் பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கூடிய சீக்கிரம் நீங்க திரும்ப எழுந்து நடப்பீங்க என்று தன்னம்பிக்கையாக பேசுகிறார். அடுத்ததாக பழனிச்சாமி இருவரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க, அப்போது அம்மா உடைய பிறந்தநாளுக்கு உங்க சொந்தக்காரங்க எல்லோரையும் கூப்பிடுங்க என்று சொல்கிறார்.
சூப்பர் ஸ்டார் இரண்டாவது மகள் காவல் நிலையத்தில் திடீர் புகார்.., என்ன காரணமா இருக்கும்?
அப்போ தான் உங்களுக்கு எவ்வளவு பேர் இருக்காங்க என்று தெரியவரும். இதனாலேயே அவர் பாதி குணமாகி விடுவார் என்று பாக்கியா சொல்கிறார். இதற்கு பழனிச்சாமி இதுவும் நல்ல ஐடியாவே இருக்கு என்று அப்படியே செய்வதாகவும் கூறுகிறார். பின் இருவரும் அங்கிருந்து கிளம்ப அந்த நேரத்தில் கோபி அந்த பக்கம் வருகிறார். அப்போது பாக்யாவும் பழனிச்சாமியும் பேசுவதை பார்த்து அதிர்ச்சியான கோபி இதுதான் இவனுடைய வீடா? அப்போ பாக்கியா இங்க தான் அடிக்கடி வந்துட்டு போறாளா? என மனதுக்குள் நினைக்கிறார்.
பின் எல்லோரும் கோபி தப்பு பண்றாங்க, ஆனா பாக்கியா தப்பு பண்றது இல்லை என்று சொல்றாங்க. ஆனால் பாக்கியா பண்ற தப்பு எதுவும் வெளியே தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது