இந்திய அணியின் இளம் வீரரான கே எல் ராகுல் அணிக்கு திரும்புவது குறித்து, முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கே எல் ராகுல்:
சர்வதேச இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், முடிவடைந்தவுடன் இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பிசிசிஐயானது, சமீபத்தில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், இந்த அணியில் இடம் பெற்ற கே எல் ராகுல், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் அவதி பட்டு வருகின்றனர். இதில், கே எல் ராகுல் ஐபிஎல்லில் விளையாடிய போது, தொடையின் தசை பகுதியில் பலத்த காயம் அடைந்தார். இதனால், தானாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
டெல்லி அணியை எதிர்கொள்ளும் CSK படை…, சேப்பாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்க விட போவது யார்??
இதையடுத்து, இவருக்கு மாற்று வீரராக, இஷான் கிஷனை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், கே எல் ராகுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், விரைவில் பூரணமாக குணமடைந்து களத்தில் இறங்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram