தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவிலான ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோவாக நடித்த இவரின் திரைப்பயணம் தற்போது அண்ணாத்த படம் வரை நீண்டுள்ளது.
இவரின் இந்த மகத்தான திரைப்பயணத்தை போற்றும் விதமாக மத்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. சக திரை கலைஞர்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் சூப்பர் ஸ்டாரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்