அம்மாவின் காலில் விழுந்து கதறும் சரவணன் – மன்னிப்பாரா சிவகாமி??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சிவகாமியையும், சரவணனையும் சேர்த்து வைக்கும் பணியில் சந்தியா இறங்கியுள்ளார். தற்போது வெளியான ப்ரோமோவில் தனது மகனுக்காக லட்டு செய்து கொடுக்கிறார் சிவகாமி.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா படித்திருப்பது விஷயம் சிவகாமிக்கு தெரிய வருகிறது. இதனால் தன்னை ஜெயிலுக்கு அனுப்பியது சந்தியா தான் என்று தப்பு கணக்கு போடுகிறார் சிவகாமி. வீட்டை விட்டு சந்தியாவை துரத்த சரவணன் சந்தியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்.

தன் மகன் பேச்சை மீறுகிறானே என்ற விரக்தியில் சரவணனிடம் பேசாமல் இருக்கிறார் சிவகாமி. இதனால் சரவணனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. தற்போது 500 லட்டுகள் ஆர்டர் வர சரவணனுக்கு அதனை செய்யும் எண்ணமே இல்லை. மாவும் சரியான பதத்திற்கு வராததால் அப்படியே விட்டு விடுகிறார்.

சந்தியா இதுதான் சரியான நேரம் என்று சரவணனை அவரின் அம்மாவுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். சிவகாமியிடம் இந்த விஷயத்தை சொன்னால் மகனின் நிலைமையை பார்த்து அவரே லட்டு செய்ய உதவுவார் என்று நினைக்கிறார். ஆனால் சந்தியா எவ்வளவு சொல்லியும் சிவகாமி ஒத்துவரவில்லை.

‘தளபதி 65க்கு பிறகு கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவீர்கள்’ – இயக்குனர் நெல்சன் பேட்டி!!

கடையில் சரவணனின் அப்பாவும் சந்தியாவும் வீட்டிலேயே லட்டு செய்ய ஒத்துக்கொள்கின்றனர். சமையல் என்றால் என்ன? என்று 2 பேருக்குமே தெரியாது. லட்டு சிவப்பு நிறத்தில் வர தக்காளியை பிழிந்து விட செல்கின்றனர். இதனால் கோவமடையும் சிவகாமி அவங்களை எழுப்பி விட்டு அவரே லட்டு செய்கிறார்.

சரவணனிடம் ஆர்டர் கொடுத்தவர் வந்து லட்டுவை கேட்கிறார். சரவணன் இன்னும் செய்யவில்லை என்று சொல்ல கேவலமாக திட்டுகிறார். சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியுதா உனக்கெல்லாம்? என்று சொல்கிறார். அதற்குள் சிவகாமி அங்கு வந்து விட லட்டுவை அவருக்கு தருகிறார். இதனை பார்த்த சரவணன் அம்மாவின் காலில் விழுந்து கதறுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here