ராஜா ராணி சீரியலில் பார்வதிக்கு நிச்சயம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது சரவணன், சந்தியாவை எப்படி வீட்டை விட்டு துரத்துவது என்று குறியாக உள்ளார். இதற்கு அவருக்கு ஆதாரமும் சிக்குகிறது.
ராஜா ராணி
பார்வதிக்கு பாஸ்கருடன் பல தடங்கல்களை தாண்டி நிச்சயம் நடந்து கொண்டுள்ளது. நிச்சயத்திற்கான அனைத்து வேலைகளும் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான் சரவணனுக்கு நாளுக்கு நாள் குற்ற உணர்ச்சி அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
சந்தியா தனக்கு பொருத்தமானவர் கிடையாது என்று நினைத்து கொண்டே உள்ளார். இந்நிலையில் சந்தியாவின் பேக்கில் விவாகரத்து பத்திரம் இருப்பதை பார்த்து விட்டு இதை வைத்தே பிரச்சனையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து கொள்கிறார்.
அப்பொழுது பார்த்து சந்தியா உள்ளே வர தனக்கு பணம் தேவைப்படுவதாக சொல்கிறார். சந்தியா பேக்கை எடுக்க அப்பொழுது அந்த பத்திரம் கீழே விழுகிறது. அதனை பார்த்து இது விவாகரத்து பத்திரம் தானே என்று கண்டுபிடிக்கிறார். மேலும் பார்வதி நிச்சயம் முடியட்டும் பேசிக்கொள்ளலாம் என்று கூறுகிறார் சந்தியா.
சரவணனுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். அப்பொழுது மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவருமே வருகின்றனர். பார்வதி கிளம்பி தயாராக இருக்க அவரது தோழி வருகிறார். விக்கி இப்படி ஒரு அய்யோக்கியனாக இருப்பான் என்று ஒருநாளும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்.
மேலும் தான் பரிட்சையில் பெயில் ஆன விஷயத்தையும் கூற அப்பொழுது அர்ச்சனா என்ட்ரி கொடுக்கிறார்.ஆனால் அவர் அந்த விஷயத்தை கேட்கவே இல்லை. அடுத்ததாக சந்தியா சரவணனை விட்டு பிரிந்து விடுவோமோ என்ற பதட்டத்திலேயே இருக்கிறார்.
மேலும் சரவணன் சந்தியாவின் நினைப்பில் சோகமாக இருக்கிறார். நிச்சயம் நல்லபடியாக முடிவடைகிறது, ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்திருக்க சந்தியாவிற்கு நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் உள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்