சிவகாமியை ஜெயிலுக்கு அனுப்பியதை பற்றி விசாரிக்கும் சந்தியா – சிக்குவாரா அர்ச்சனா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் சந்தியாவை வீட்டை விட்டு துரத்த சரவணனின் தம்பி தங்கையான ஆதி, பார்வதியும் திட்டம் போடுகின்றனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் சந்தியா தொடர்ந்து பல சிக்கல்கள் சிக்கி வருகிறார். சிவகாமி பல வேலைகளை கொடுத்து சந்தியாவை நோகடித்து வருகிறார். ஆனாலும் முகம் சுளிக்காமல் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் பொறுத்து வருகிறார். அதற்கு சரவணனும் பக்கபலமாக இருக்க சந்தியா தைரியமாக இருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் வீட்டில் எப்பொழுதும் தமிழ் பேப்பர் போடுபவர் திடீரென இங்கிலீஸ் பேப்பரை போட்டு விட்டு செல்கிறார். சரவணனின் அப்பா ஆதியிடம் வாசிக்க சொல்ல தெரியாமல் முழிக்கிறார். அதே போல் பார்வதியும் முழிக்க கோவமடைகிறார் சரவணனின் அப்பா.

அதன் பின் சரவணன் சந்தியாவை அழைத்து வாசிக்க சொல்ல அனைத்தையும் வாசித்து அர்த்தம் சொல்கிறார். திடீரென பின்னால் இருந்து வரும் சிவகாமி பேப்பரை வாங்கிவிட்டு அனைவரையும் போக சொல்லி திட்டுகுகிறார். பார்வதிக்கு சந்தியாவை சுத்தமாக புடிக்கவும் இல்லை.

அடுத்ததாக சிவகாமி சாமி கும்பிடும்போது, ஜெயிலுக்கு போனது நினைவுக்கு வர கண்கங்குகிறார். தான் ஜெயிலுக்கு சென்றது எவ்வளவு கீழ்த்தரமான விஷயம் என்றும் கூறுகிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்கும் சந்தியா இந்த கம்பளைண்டை யார் கொடுத்திருப்பார் என்று யோசிக்கிறார்.

“கர்ணன்” திரைப்படத்தின் டீஸர் – நடிகர் தனுஷ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!!

அர்ச்சனா எதற்காக தன்னை மாட்டிவிட வேண்டும். என் மேல் தப்பு இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது என்றும் யோசிக்கிறார். எந்த பக்கம் பார்த்தாலும் விஷயம் பிடிபடவில்லை. அடுத்ததாக பார்வதி ஆதியின் ரூமுக்கு செல்கிறார். சந்தியா லேப்டாப் வாங்கி கொடுத்ததை அம்மா கிட்ட சொல்லிவிட்டாயா?? என்று கேட்கிறார்.

அம்மாவிடம் சொல்ல பயமாக இருப்பதாக ஆதி சொல்கிறார். பார்வதி தனக்கு சந்தியாவை பிடிக்கவில்லை என்றும் இந்த லேப்டாப் விஷயத்தை வேறு விதமாக சொல்லி சந்தியாவை வீட்டை விட்டே துரத்தி விடலாம் என்றும் ஆதியிடம் கூறுகிறார்.

அப்பொழுது சந்தியா ரூமிற்கு வந்து ஆதிக்கு தேவையான புக்ஸ் தருகிறார். அடுத்ததாக சந்தியாவின் தோழி கால் செய்து உன் இலட்சியத்தை அடைவது தான் நல்லது என்று கூறுகிறார். இதனால் சந்தியா குழப்பமடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here