ராஜா ராணி சீரியலில் சரவணனின் கடை பிரச்சனையில் ஓடிக்கொண்டிருக்க சந்தியா நேர்மையாக தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதனால் சரவணன் லஞ்சம் கேட்கும் அதிகாரியை சென்று சந்திக்கிறார்.
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியலில் வருடா வருடம் குவாலிட்டி இன்ஸ்பெக்சன் செய்யும் அதிகாரி சரவணன் லஞ்சம் கொடுக்க சொல்லி மிரட்ட இந்த வருடம் சந்தியா கண்டிப்பான முறையில் நேர்மையாக தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் தான் ஸ்வீட் சாம்பிளை எடுத்து கொண்டு அங்கு செல்கிறார். அங்கு சென்றால் அந்த அதிகாரி சரியான கோவத்தில் இருக்க எப்படி கடையை நடத்துகிறார் என்று பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்.
வீட்டில் சந்தியா கவலையில் இருக்க ரவி வந்து சமாதானம் செய்கிறார். சரவணன் எப்படியும் உன்னை தவறாக நினைக்க மாட்டான் என்று கூறுகிறார். அப்பொழுது சிவகாமி அங்கு வர என் பையன் இடிஞ்சி போயிட்டான். எப்படி கடையை நடத்த போறான்னு கவலையில் சரவணன் போயிருக்கான். இனி சரவணனுக்கு எப்படி நல்ல பொண்டாட்டியா இருக்கணும்னு மட்டும் பாரு என்று சொல்கிறார்.
இதனால் சந்தியா அழுதுகொண்டே செல்கிறார். சரவணன் பேசியத்தையெல்லாம் நினைத்து பார்க்கிறார். இதற்கு மேல் நான் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று கதறி அழுகிறார். அடுத்ததாக அர்ச்சனா எதை பற்றியோ யோசித்து கொண்டிருக்க செந்தில் வந்து வம்புக்கு இழுக்கிறார். அடுத்ததாக சரவணன் சந்தியா உடன் வழக்கம் போல நடந்து கொள்வதில்லை என்று சொல்கிறார்.
அடிக்கடி கோவப்படுகிறார், இரவு முழுக்க கடையிலேயே தூங்குகிறார். எதோ தவறாக தெரிவதாக சொல்கிறார். அடுத்ததாக அர்ச்சனாவின் தங்கை கால் செய்கிறார். தனக்கு எப்பொழுது கல்யாணம் செய்து வைப்பீங்க என்று புலம்புகிறார். எப்படியோ சமாளித்து வைத்து விடுகிறார். ரவி சென்று சரவணனுக்கு அனைத்து விஷயங்களையும் எடுத்து சொல்கிறார். ஆனாலும் சரவணன் சந்தியா மீது கோவமடைகிறார். எல்லாம் சந்தியா பண்ண வேலை தான் என்று சொல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்