பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமாவை கண்ணம்மா வீட்டில் சென்று விட தனக்கென்று யாருமே இல்லை என்று புலம்புகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா தூங்கும்போது கூட சமையல் அம்மா என்று புலம்ப பாரதி வேறு வழியில்லாமல் கண்ணம்மா வீட்டில் சென்று விடுகிறார். ஹேமாவும் கண்ணம்மாவும் நெருக்கமாக இருப்பதை பார்த்து தவிக்கிறார் பாரதி. எப்படி இவள் மீது ஹேமா இவ்வளவு பாசமாக இருக்கிறாள் என்று யோசிக்கிறார்.
ஹேமாவை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கிருந்து செல்கிறார். காரில் ஹேமாவுடன் இருந்த நாட்களை நினைத்து பார்க்கிறார். எப்படியும் ஹேமா தன்னை தேடுவாள் என்று கண்கலங்குகிறார். மேலும் தனக்கென்று இந்த உலகத்தில் யாருமில்லை என்று கண்கலங்குகிறார். மேலும் பாரதி அடிக்கடி வீட்டிற்கு சென்றால் அங்கு லட்சுமி இருப்பாளே என்ன செய்வது என்று சௌந்தர்யா யோசிக்கிறார்.
அடுத்ததாக ஹேமாவை கண்ணம்மா மாத்திரை கொடுத்து தூங்க வைக்கிறார். சௌந்தர்யா கால் செய்து லட்சுமி விஷயத்தை பற்றி சொல்கிறார். லட்சுமி பக்கத்தில் தெருவில் தான் வீடு சமையல் அம்மாவை பார்க்க வந்ததாக சமாளித்து விடலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக ஹேமா பேப்பரில் கப்பல் செய்வது கொண்டிருக்க அதற்கு கண்ணம்மா உதவுகிறார்.
ஹேமாவிற்கு வேர்த்து கொட்டுகிறது. ஏசியிலேயே இருந்த ஹேமாவிற்கு இது மிகவும் வேர்கிறது. அப்பொழுது பார்த்து ஏசி வீட்டிற்கு வருகிறது. பாரதி ஹேமாவிற்காக வாங்கி வைக்கிறார். இதனால் கோவமடையும் கண்ணம்மா அதனை பாரதி வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார். அதன் பின் அஞ்சலியிடம் இருக்கும் முகவாட்டத்தை நினைத்து அட்வைஸ் செய்கிறார். ஆனால் அஞ்சலி எப்படி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க போகிறோமோ என்று பதட்டத்தில் உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்