விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சந்தியா தனது கணவரையும், அத்தையையும் சேர்த்து வைப்பதற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது மனமிறங்கி வருகிறார் சிவகாமி.
ராஜா ராணி 2
முந்தைய எபிசோடில் தொடர்ந்து தனது கோவத்தை காட்டிக்கொண்டிருக்கும் சிவகாமி தனது மகனின் நிலையை நினைத்து மனதிலேயே அழுகிறார். இதனை பார்க்கும் சந்தியா எவ்வளவு மன்னிப்பு கேட்டும் மன்னிப்பதாக இல்லை. தனது பிடிவாதத்தால் யாரையும் மன்னிக்காமல் இருக்கிறார் சிவகாமி.
அடுத்ததாக சரவணனிடம் கடைக்கு வாடகையும் கேட்கிறார். இதனால் மிகவும் நொந்துபோகும் சரவணன் எந்த வேலையிலும் ஈடுபாடில்லாமல் இருக்கிறார். இதனை சந்தியாவாலும் தாங்க முடியவில்லை. மேலும் எப்படியாவது அந்த லட்டு ஆர்டரை செய்து கொடுத்து விட வேண்டும் என்று துடிக்கிறார் சந்தியா.
இதற்கு பல திட்டங்கள் போடுகிறார். அத்தையிடம் இதனை பற்றி சொன்னால் கண்டிப்பாக லட்டு செய்து கொடுப்பார் என்று நினைக்கிறார். இன்றைய எபிசோடில் சிவகாமியிடம் சென்று நடந்தவற்றை சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் எதையுமே கேட்பதாக இல்லை. சரி என்று சரவணனின் அப்பாவும், சந்தியாவும் செய்யலாம் என்று முடிவு செய்கின்றனர்.
சரவணனின் அப்பா நாம் எதாவது தவறாக செய்தால் கண்டிப்பாக சிவகாமி வந்து விடுவாள் என்று சொல்ல, வேண்டும் என்றே எல்லாவற்றையும் தவறாக செய்கின்றனர். லட்டில் தக்காளியை போட கோவமடையும் சிவகாமி அவர்களை எழுப்பி விட்டு அவரே லட்டு செய்கிறார். அதனை யாரிடம் கொடுத்து விடலாம் என்றும் யோசிக்கிறார்.
தனது சின்ன மருமகளை கூப்பிட கடையில் வேலை இருப்பதாக சொல்லி போனை கட் செய்கிறார். அடுத்ததாக தனது கணவரை கூப்பிட போக அவர் தூங்குவது போல நடிக்கிறார். சந்தியாவை கூப்பிட போக அவர் ஒளிந்து கொள்கிறார். கடையில் சரவணனிடம் ஆர்டர் கொடுத்தவர் வர எதுவும் செய்யாததை பார்த்து திட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.