தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 9 செ.மீ, கடலூரில் 6 செ.மீ., மற்றும் விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 ºC மற்றும் 27 ºC ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் மற்றும் இன்று அந்தமான் பகுதியில் 45-55 கி.மீ வேகத்திலிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.