தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி., 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை., அடுத்த 3 மணி நேரத்தில்!!!

0

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான Question Bank தொகுப்பு., பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here