காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமையை நிலைநாட்ட யாத்திரை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை நாளையுடன் (ஜனவரி 30) முடிய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி இதுவரையிலும் 75 மாவட்டங்கள் கடந்து ஸ்ரீ நகர் வந்துள்ளார். இனி ஸ்ரீநகரில் இருந்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் லால் சவுக் நகரில் மூவர்ணக் கொடியை ஏற்றவுள்ளார். இங்கு பல்லாயிரக்கணக்கானோர் கூட இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு ஷாக்.,புறப்பட இருந்த Train உட்பட 322 ரயில்கள் ஒரே நாளில் ரத்து!!
பின்னர் நேரு பூங்கா நோக்கி சென்று 4080 கி.மீ. யாத்திரையை வெற்றிகரமாக முடிக்க உள்ளார். நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரையை பல்வேறு சிக்கல்களை தாண்டி முடிக்க உள்ளதால் பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.