ராதிகா சரத்குமார் வாணி ராணி சீரியலில் நடித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி ரியூனியன் நடத்தியுள்ளனர்.
வெளியான போட்டோ:
இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை ராதிகா, வெள்ளித்திரையில் எப்படியோ அதேபோலவே சின்னத்திரையிலும் பெரிய அளவில் பேசப்பட்டார். சித்தி சீரியல் மூலம் அழுத்தமான இடத்தை பிடித்த இவர் அதன் பிறகு வாணி ராணி, சித்தி 2 உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் இவர் நடித்த, வாணி ராணி சீரியல் ஒளிபரப்பாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் பிரபலங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடி Reunion நடத்தினர்.
Ex கணவர் தினேஷ் செயலால் மனம் மாறிய ரட்சிதா., சீக்கிரம் அந்த குட் நியூஸ் நடக்க போது மக்களே!!
இது குறித்த பல போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ராதிகா, அங்கிருந்து அனைவருக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார். இந்த போட்டோவை பார்த்த பலரும் மீண்டும் இந்த டீம் புது சீரியலில் இணைந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.