நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் இதற்கான முன்பதிவு வெகு சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. இதையடுத்து, தற்போது ஒவ்வொரு வாரமும் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் முக்கிய ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நேரங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், புறப்பட இருந்த 48 ரயில்கள் உட்பட 322 ரயில்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கார்டு கணக்கெடுப்பு தீவிரம்.,ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு!!
இதனால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டு ரயில் நிலையங்களில் திகைத்து நிற்கின்றனர். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு வங்கி கணக்கிலும், கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்கள் கவுண்டரிலும் பணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் தகவல்களை indianrail.gov.in/mntes என்ற இணையத்தளத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.