தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயில் காரணமாக ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் பஞ்சாப் மாநில பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூலை 2ம் தேதி வரை கோடை விடுமுறை வழங்க வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை மாவட்ட கல்வி அலுவலர் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.