கண்டித்ததால் ஆத்திரம்..! தந்தையை குத்திக்கொன்ற 13 வயது சிறுவன்!!!

0

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் 13 வயது சிறுவன் தனது 40 வயது தந்தையை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனும், சிறுவனின் தங்கையும் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட போது, சிறுவனின் தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொலை செய்யப்பட்டவர் புனேவில்  காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது மனைவி,  இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை 5:30 மணியளவில், அவரின் மகளும் மற்றும் 13 வயது மகனும் சண்டையிடுவதைக் பார்த்து கண்டித்துள்ளார். அப்போது அவரின் மகன் அவர் மேல் கோபமடைந்து கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் காயமடைந்த காவலாளியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு  அச்சிறுவனை போலீசார் தற்போது காவலில் வைத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் தாக்க பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.பெற்ற தந்தை திட்டியதால், மகனே தந்தையே கொலை செய்த சம்பவம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here