ஏட்டு சந்தியா ராணியின் நான்காவது கணவன் என்னை ரூமில் அடைத்து டார்ச்சர் செய்வதாக போலீசிடம் அழுது புகார் கொடுத்துள்ளார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
” ஆம்பள பையன் அழக்கூடாது”:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சந்தியா ராணி. 30 வயதான இவர் 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் தற்போது ஒரு இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நாட்டில் ஒரு கல்யாணம் பண்ணுறதுக்கே பலர் யோசிக்கும் போது; ஒரு பெண் இப்படி அடுத்தடுத்து ஆண்களை திருமணம் செய்ததுள்ளது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் நான்காவதாக ஏட்டு சந்தியா ராணியை திருமணம் செய்த அந்த இளைஞரை மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதாக அழுதுகொண்டே ஹைதரபாத் போலீசுக்கு புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை காவலர் சந்தியா ராணி அடுத்தடுத்து நான்கு பேரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குக்கட்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் வைத்து சரண் தேஜை 4 வதாக சந்தியா திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி டார்ச்சர் செய்துள்ளார். சரண் தேஜ், சந்தியா ராணி சொல்வதற்க்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை ரூமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். இந்த விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
Vgood