இப்படி ஒரு கொடூர தாயா.. மகளின் நண்பனுக்கு விஷம் வைத்த அம்மா – காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

0

தனது மகளுடன் படிக்கும் சக மாணவனை குளிர்பானத்தில் விஷம் கொடுத்து தாய் ஒருவர் கொல்ல முயன்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்பானத்தில் விஷம்:

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக மாதத்திற்கு ஒரு மாணவர் தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் அச்சம் அடைகின்றனர். மேலும் இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசாங்கம் ஒவ்வொரு பள்ளிக்கும் விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுசேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியின் தாயார் செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டன் என்ற மாணவன் ஆண்டுவிழாவுக்கு பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாயார் காலை 11 மணியளவில் பால மணிகண்டனுக்கு குளிர்பானத்தை கொடுக்குமாறு அப்பள்ளியின் வாட்ச்மேன் ஒருவரிடம் கொடுத்துள்ளார். அந்த தாயார் கூறியதை கேட்டு வாட்ச்மேன் மாணவனிடம் பானத்தை கொடுத்துள்ளார், அந்த மாணவனும் மதிய இடைவேளையில் குடித்து உள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் பதறி போய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது அந்த மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது ஒரு மாணவியின் தாயார் குளிர்பானத்தை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அந்த தாயாரை கைது செய்து விசாரணை செய்த போது குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே நான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் விசாரணை செய்ததில், அந்த மாணவன் நன்றாக படிப்பதாகவும் தன் மகளை விட அந்த மாணவன் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றதால், அதைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் தாயார் அடிக்கடி மகளுடன் தகராறு செய்து வந்த நிலையில் மணிகண்டனை கொல்ல முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here