நடிகர் ஜீவாவுடன் இணைந்து கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் கால்பதித்தவர் அஞ்சலி. இவரின் முதல் படமே தமிழ் சினிமாவில் இவர் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
ஏனெனில் அவ்வளவு இயல்பான நடிப்பை முதல் படத்திலேயே அஞ்சலி வெளிப்படுத்தியிருப்பார் பின்னர் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, அங்காடி தெரு ஆகிய படங்களில் நடித்து இருந்தார். ஆனால் திடீரென்று ஒருநாள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின்னர் பல நாட்களுக்கு பிறகு பலூன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் இவர் ஆடிய ஐட்டம் பாடல் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் தற்போது போட்டோ ஷூட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டி வரும் அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.