தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக இப்போது தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். அதாவது மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
இதனால் பொதுமக்கள் யாரும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும் இந்த வெயில் காலத்தில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் எனவும், குடை, தொப்பி, காலணிகளை அணிந்து வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC தேர்வர்களே., 2024 “குரூப் 1” தேர்வு அறிவிப்பு வெளியீடு., இந்த தேதி வரை விண்ணப்பம்!!!