இன்றைய சூழலில் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தாலும், ஒரு சில வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதால், நீதிபதிகளின் நேரங்கள் மட்டுமே வீணாக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்நேரத்தில் இயக்கத்தடை விதிக்க வேண்டும் என, ஜமீன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பொதுநல வழக்கு பதிவு செய்த மனுதாரருக்கு ரூ.25,000 அபராதத்தை விதித்து, நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.