புரோ கபடி லீக் தொடர் போட்டிகளில் Do or Die விதிமுறையை பற்றி இந்த தகவலில் தெரிந்து கொள்ளலாம்.
Do or Di
புரோ கபடி லீக் தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கபடி லீக் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த புரோ கபடி தொடர் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் அணிகளில் தமிழ் தலைவாஸ், புனேரி பல்டன், பெங்களூர் புல்ஸ் போன்ற அணிகளுக்கு தீவிர ரசிகர்கள். இதில் புனேரி பல்டன் அணி Do or Die முறையில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இந்த Do or Die முறை என்பது மூன்று தொடர்ச்சியான ரைடுகளை மேற்கொள்ளும் வீரர் எந்த விதமான பாயிண்டையும் எடுக்கவில்லை என்றால், எதிரணிக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். இந்த முறையில் தான் புனேரி பல்டன் அணி முன்னிலையில் உள்ளது. எனவே இந்த வெற்றியை இதே ஆண்டு தக்க வைக்குமா என பார்க்கலாம்.