தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் இந்த புயலால் அந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மீட்பு பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வரை பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை குறித்து விசாரித்துள்ளார். அப்போது முதல் பிரதமரிடம் மத்திய குழுவை அனுப்பி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.., மதுவை ஊற்றி விட்டு நடந்த கொடூரம்!!